குவைத் நாட்டின் அப்துல்லா அந்நூரி அமைப்பினால் சுமார் ஆறு மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஏறாவூர் – ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.எஸ். லாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ். எம். எம். அமீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அப்துல்லா அந்நூரி அமைப்பின் அபிவிருத்தி பிரிவிற்கான ஐ.எஸ்.ஆர்சி திட்ட இணைப்பாளர் ஜுனைட் நழீமி , பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.ஜே.எப்.றிப்கா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இக்கலாசார மண்டபம் அடுத்த சுமார் மூன்று மாத காலத்திற்குள் அடிப்படை வசதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்படவுள்ளது.
(ஏறாவூர் நிருபர்)