வின்செண்ட் குரோசி கரித்தாஸ் என்ற பொது அமைப்பை ஆரம்பித்து சமூக பணிகளை தொடக்கி வைத்த அருளாளர்.
தன்னுடைய இளம் வயதிலேயே பள்ளியில் கற்கும்போது தன்னுடன் படித்த சக மாணவர்கள் வியக்கும் வகையில் அனைவரையும் சிரிக்கவைப்பார். தினமும் தவறாமல் ஆலயத்திற்கு சென்று, பங்குத்தந்தைக்கு உதவி செய்து வந்தார். தன் கல்வியை முடித்தப்பிறகு, 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.
பின்னர் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் நிறைந்த பங்கிற்கு அவர் அனுப்பப்பட்டார். அப்பங்கில் பல துன்பங்களை அனுபவித்தார். தகாத சொற்களால் அவமானப்படுத்தப்பட்டார்.
இருப்பினும் அவர் தன்னம்பிக்கையை இழக்காமல் அம்மக்களின் ஒற்றுமைக்காகவும், நலமான வாழ்வை சுமூகமான உறவைக் கொண்டு வருவதற்காகவும் அயராது உழைத்தார்.
அவரின் செயல்களைக் கண்டு அப்பங்கு மக்கள் அருட்தந்தைக்கு உதவினர். தங்களிடையே இருந்த எல்லாப் பிரச்சனைகளையும் அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொண்டனர். பின்னர் வின்சென்ட் அம்மக்களின் ஒற்றுமையை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்காக கரித்தாஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அவ்வமைப்பின் வழியாக சமூகப்பணிகளிலும் மக்களை ஈடுபடவைத்தார்.
அதன்பின்னர் இளைஞர்களுக்காக பல மன்றங்களையும் நிறுவி சிறப்பாக தன் மறைபணியை ஆற்றியுள்ளார். அவற்றின் ஊடாக பாரிய சமூகப் பணிகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எல்.எஸ்