இஸ்ரேலில் தொழில்புரிந்ந ஆயிரக்கணக்கான பலஸ்தீன தொழிலாளர்கள் காசாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காசாவைச் சேர்ந்தவர்களுக்கான வேலை அனுமதியை இஸ்ரேல் இரத்துச் செய்துள்ளது.
காசாவில் போர் வெடித்ததை அடுத்து இஸ்ரேலிய துருப்புகளால் தாம் அவமானத்திற்கும் பாகுபாட்டுக்கும் முகம்கொடுத்ததாக இவ்வாறு காசா திரும்பிய பலஸ்தீனர்கள் தெரிவித்துள்ளர். காசாவைச் சேர்ந்த சுமார் 4,500 தொழிலாளர்கள் காணாமல்போயிருப்பதாக பலஸ்தீன அதிகாரசபையின் தொழில் அமைச்சு ஒரு வாரத்திற்கு முன் மதிப்பிட்டிருந்தது. இந்நிலையில் 3,200 பேர் காசாவுக்கு திரும்பியதாக இஸ்ரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டது.
இவ்வாறு காசா திரும்பியவர்கள் தாம் பாகுபாட்டுக்கு முகம்கொடுத்தாகவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பலஸ்தீன அதிகாரசபை உட்பட யாரும் உதவிக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தனது குழந்தையின் வயதான ஒருவர் தன்மீது சிறுநீர் கழித்ததாக ஒருவர் தெரிவித்தார். மேற்குக் கரையில் தாம் அடைக்கலம் பெற்றபோது பலஸ்தீன அதிகாரசபை தம்மை இஸ்ரேலிய நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.