Friday, April 26, 2024
Home » ஈரான் தூதரக ஏற்பாட்டில் கொழும்பில் மீலாத் நிகழ்வு

ஈரான் தூதரக ஏற்பாட்டில் கொழும்பில் மீலாத் நிகழ்வு

by damith
October 9, 2023 8:06 am 0 comment

கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசு தூதரகத்தின் கலாசார நிலையம் ஏற்பாடு செய்திருந்த மீலாதுந்நபி விழா மற்றும் அகில இலங்கை கிராத் மற்றும் ஹிப்ழ் போட்டிகளில் வெற்றிபெற்றோர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கலாசார நிலைய கேட்போர் கூடத்தில் கலாசார பிரிவு கவுன்சிலர் கலாநிதி பி. மோஅஸாமி குடார்சி தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கிவைத்தார்.

இலங்கைக்கான புதிய ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் கலாநிதி அலி ரெஸா டெல்கோஷ் மற்றும் கலாசார ஆலோசகர் கலாநிதி பி. மொஅஸாமி குடார்சி ஆகியோரும் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர். ஹிப்ழ் போட்டியில் வெற்றி பெற்ற பாணந்துறையைச் சேர்ந்த அல் ஹாபிழ் மொஹமட் ரிஸ்னி ஸரூக் ஆண்கள் பிரிவில் வெற்றிபெற்று விருது மற்றும் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

ருசைக் ஃபாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT