561
கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலை உயர்வுடன் சில வகையான உணவுகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, தேநீரின் விலை 10 ரூபாவினாலும், கொத்து ரொட்டியின் விலை 20 ரூபாவினாலும், பிரைட் ரைஸின் விலை 50 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.