Saturday, April 27, 2024
Home » மீலாத் தினத்தை முன்னிட்டு மடவளை பஸாரில் இரத்ததானம்

மீலாத் தினத்தை முன்னிட்டு மடவளை பஸாரில் இரத்ததானம்

வை.எம்.எம்.ஏ அமைப்பு நடத்தியது

by damith
October 2, 2023 11:03 am 0 comment

கண்டி – மடவளையில் தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ. (YMMA) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட இரத்ததான முகாம் கடந்த வியாழக்கிழமை பமடவளை பஸார் வை.எம்.எம்.ஏ. அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம். ரிஷாட் தலைமையில் நடைபெற்றது.

17வது தடவையாகவும் இடம்பெற்ற இ இரத்ததான முகாமில் சுமார் 450 ற்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்ததாக மடவளை பஸார் வை.எம்.எ.ஏ அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.எம்.ஹசன் பிராஸ் தெரிவித்தார்

நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய தலைவர் இஹ்ஸான் ஏ ஹமீத், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் முன்னாள் தலைவர் சஹீட் எம் ரிஸ்மி, விசேட அதிதிகளாக மடவளை பஸார் ஜாமிஉல் ஹைராத் ஜூம்ஆ பள்ளி வாசல் தலைவரும் அகில இலங்கை மொத்த சில்லறை வியாபார சங்கங்களின் தலைவருமான டப்ளியு.எம். நஜீம் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT