76
தமிழ் சிங்கள புத்தாண்டில் விசேட அம்சமாக கருதப்படும் சுபவேளையில் மரம் நடும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நேற்று (18) காலை 10.16 மணிக்கு அலரி மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதமர் நெல்லி மரக்கன்றை சுப வேளையில் நட்டு வைத்தார். நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.