Thursday, May 2, 2024
Home » இம்முறை 15,000 ஏக்கரில் நிலக்கடலை பயிரிடுவதற்கு அரசாங்கம் திட்டம்

இம்முறை 15,000 ஏக்கரில் நிலக்கடலை பயிரிடுவதற்கு அரசாங்கம் திட்டம்

by Gayan Abeykoon
April 19, 2024 4:07 am 0 comment

இம்முறை சிறுபோகத்தின் போது அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகளவான நிலப்பரப்பில் நிலக்கடலையினை பயிரிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாய திணைக்கள மாவட்ட பணிப்பாளர் தேனுவர தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இம்முறை சிறுபோகத்தின் போது 15,000 ஏக்கரில்  அதிக விளைச்சலினை தரக்கூடிய நிலக்கடலையினை செய்வதற்கு விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைவாகவே இம்முறை அநுராதபுரம் மாவட்டத்திலும் அதிகளவிலான நிலப்பரப்பில்  நிலக்கடலையினை செய்கை பண்ணுவதற்கு திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

நிலக்கடலை செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக தேவையான நிலக்கடலை விதைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இதன்மூலம் பெரிதும் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய திணைக்கள அநுராதபுரம் மாவட்ட பணிப்பாளர்  மேலும் தெரிவித்தார்.

அநுராதபுரம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT