Wednesday, May 1, 2024
Home » கோப்பாய் கலாசாலையில் தமிழக பேராசிரியரின் உரை

கோப்பாய் கலாசாலையில் தமிழக பேராசிரியரின் உரை

by Gayan Abeykoon
April 19, 2024 4:53 am 0 comment

தமிழ்நாடு, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல் புலத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் கு.சின்னப்பன், யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

‘ஆசிரியர் கல்வியின் சமகால செல்நெறி’ எனும் தலைப்பில் அவர் உரையாற்றவுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (22) காலை 9.00 மணிக்கு மேற்படி கலாசாலையின் ரதி லட்சுமி மண்டபத்தில் அவரது உரை நடைபெறவுள்ளது.

கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இதற்கான நிகழ்வில் அதிதி அறிமுக உரையை யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கல்வியியல் துறை விரிவுரையாளர் இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா நிகழ்த்தவுள்ளார்.

தமிழக பேராசிரியரின் பெறுமதி மிக்கதான உரையை கேட்க விரும்பியவர்கள் இதில் கலந்துகொண்டு நன்மையடையலாமென, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT