71
பயனுடையதான மக்கள் பங்களிப்பினூடாக உள்ளூராட்சி சபைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை மேம்படுத்துவது தொடர்பான செயலமர்வு மூதூர் பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (17) நடைபெற்றது.
மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இச்செயலமர்வு நடைபெற்றதுடன், இதன்போது உள்ளூராட்சி சபை நடவடிக்கைகள், அவற்றை மேம்படுத்துதல் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் அரசாங்க அலுவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தோப்பூர் தினகரன் நிருபர்