Home » சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

by Gayan Abeykoon
April 19, 2024 10:27 am 0 comment

சட்டவிரோதமான முறையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியொன்றினை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கலன்பிந்துனுவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கடந்த 17 ஆம் திகதி மாலை கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவின் படிகாரமடுவ பகுதியில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின்போது சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் துப்பாக்கியொன்றையும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் 50 வயதுடைய கலென்பிந்துனுவெவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT