113
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை கரையொதுங்கியதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணினது சடலமே இவ்வாறு கரையொதுங்கியதாகவும், பொலிஸார் கூறினர்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டதுடன், விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலத்தை அடையாளம் நோக்கில் விசாரணை இடம்பெறுவதாகவும், பொலிஸார் கூறினர்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்