Wednesday, May 8, 2024
Home » கெஹெலிய உள்ளிட்ட 07 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

கெஹெலிய உள்ளிட்ட 07 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

by Prashahini
April 8, 2024 11:44 am 0 comment

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தொடர்புடைய நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 28 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேகநபர்கள் 7 பேரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அதன்பின்னர் குறித்த சந்தேகநபர்கள் இன்று (08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அங்கு முதலாம், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஐந்தாவது சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 10 ஆம் மற்றும் 11 ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணை வழங்குவதா? இல்லையா? என்பதை தீர்மானிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT