நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி மற்றும் வயிற்று வலி காரணமாக நேற்று (29) வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையின் ‘R’ வார்டுக்கு கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று முன்தினம் அனுப்பப்பட்டார். இதன்போதே அவருக்கு இவ்வாறு நெஞ்சு வலி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்திய பரிசோதனையின் பின்னரே அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிறைச்சாலை வைத்தியசாலையின் 04ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.