Sunday, April 28, 2024
Home » காரைதீவில் குடும்ப சுகாதார நிலையம் திறப்பு

காரைதீவில் குடும்ப சுகாதார நிலையம் திறப்பு

by Gayan Abeykoon
March 29, 2024 7:50 am 0 comment

இலங்கை இராமகிருஷ்ணமிஷனின் காரைதீவு சாரதா நலன்புரி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) மாலை 5.00 மணிக்கு குடும்ப சுகாதார நிலையம் திறந்து வைக்கப்படும்.

இராமகிருஷ்ணமிஷனின் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தாஜீ மகராஜ் தலைமையில் நடைபெறும் இத்திறப்பு விழாவில் முதன்மை அதிதியாக இலங்கை இராமகிருஷ்ணமிஷன் தலைவர் ஸ்ரீமத்சுவாமி அக்ஷராத்மாநந்தாஜீ மகராஜ் கலந்துகொள்வார்.

முற்றிலும் இலவச சுகாதார சேவையை வழங்கவுள்ள இந்நிலையமானது திங்கள், புதன், வெள்ளியாகிய 3 தினங்களிலும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணிவரை இயங்கும்.

இந்நிலையத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரும் மருத்துவருமான இரா.முரளீஸ்வரனின் ஒத்துழைப்புடன் காரைதீவு மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் சேவையாற்றவுள்ளனர்.

காரைதீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT