மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 கல்வி வலய அலுவலக பிரிவுகளில் அமைந்துள்ள 326 பாடசாலைகளில் 52,473 மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை (27) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போசாக்கு உணவுக்கான திட்டத்தின் கீழ் மட்டக்களப்பின் மத்திய கல்வி வலய பிரிவிலுள்ள 66 பாடசாலைகளைச் சேர்ந்த 13,858 மாணவர்களும் மட்டக்களப்பு மேற்கு பிரிவில் 68 பாடசாலைகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 954 மாணவர்களும் கல்குடா கல்வி வலயத்தில் 74 பாடசாலைகளைச் சேர்ந்த 9,896 மாணவர்களும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 54 பாடசாலைகளைச் சேர்ந்த 6,535 மாணவர்களும் பட்டிருப்பு கல்வி வலயத்தில் 64 பாடசாலைகளைச் சேர்ந்த 8,230 மாணவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.