வடமாகாணத்தில் வீ டில்லாதவர்களுக்கு வீடுகளை வழங்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சூரிய கலன்களில் மின் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதன்படி, பயனாளர்களுக்கு சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான 750 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடுகள் கிடைக்கவுள்ளன. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தி ல் விடுவிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் பொது மக்களின் காணிகளை மீட்பதற்கான சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கான நடவடக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.