‘வெளிப்படையான அன்பின் பரிமாற்றமே’ மூவொரு இறைவனின் அதி உன்னதமான விபரிப்பாகும். இதற்கு முன்போ அல்லது என்றுமே மூவொரு இறைவனின் அன்பில் என்றுமே பிரிவினை கிடையாது. அவ்வாறே கடவுளின் நம் மீதான அன்பில் மட்டிலும் கிடையாது.
புனித வாரமானது இயேசுகிறிஸ்துவில் மனிதர் மட்டிலான கடவுளின் நிபந்தனையற்ற அன்பின் வெளிப்பாடானது நாடக வடிவில் வெளிப்படுத்தப்படுகின்றது. இயேசு தமது வாழ்வின் மிகவும் சவால்மிக்க, துன்பம் நிறைந்த சூழ்நிலையில் தமது அன்பினை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். தாம் இகழப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, மரணத்திற்கு உட்படுத்தப் பட்டபோதும் அவர் தமது அன்பு கூர்தலை நிறுத்தவில்லை. காரணம் அந்த அன்பு நித்திய பரிமாற்றமாகும்.
கடவுளின் சாயலிலும் பாவனையிலும் உருவாக்கப்பட்ட மனிதர்களாகிய நாம், அவரது நித்திய பரிமாற்ற அன்பினை வாழவும், பகிரவும் அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் நமக்கு நன்கு பரிச்சயமான அன்பின் வீழ்ச்சியினை இயேசு மட்டிலான யூதாசின் காட்டிக் கொடுப்பினூடாக வாசிக்கின்றோம்.
ஒவ்வொரு காட்டிக்கொடுப்பும் அன்புப் பரிமாற்றத்தின் மீறலாகும். இச்செயலானது இறையன்பு, பிறரன்பினை விடுத்து தன்னலத்திற்கு வளைந்து கொடுப்பதாகும். இது யூதாஸ் காட்டிக் கொடுப்பிற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். ஆயினும் நாமும் அத்தகைய அன்பினை மீறும் சக்தி வாய்ந்தவர்கள். கடவுளின் ஆவியானவர் தாமே நாம் இன்றும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கடவுளின் நித்திய அன்பிற்கு சான்றுபகர நம்மை உறுதிப்படுத்துவாராக.