Sunday, May 12, 2024
Home » பெரிய வெள்ளி, ஈஸ்டர் தினங்களில் தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு

பெரிய வெள்ளி, ஈஸ்டர் தினங்களில் தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு

பொலிஸ் மாஅதிபர் உரிய நடவடிக்கை

by mahesh
March 27, 2024 6:00 am 0 comment

கிறிஸ்தவ மக்களின் விசேட தினங்களான பெரிய வெள்ளி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு ஆகிய தினங்களில் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். அதேவேளை அன்றைய தினம் வழிபாட்டுக்காக ஆலயங்களுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் அவர்களின் பொருட்களையும் சோதனையிடுவதற்கு விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட வுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக அந்தந்த ஆலயங்களுக்கு பொறுப்பான அருட்தந்தையர்களுடன் கலந்துரையாடி அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அதற்கு வசதியாக இத் தினங்களில் நாட்டின் முக்கியமான பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் பரிசோதர்கள் தமது எல்லைக்குட்பட்ட அனைத்து கத்தோலிக்க ஆலயங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள அருட்தந்தையர்களை சந்தித்து அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT