திறன் மற்றும் முதலீட்டின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையர்கள் குடிபெயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், அதற்காக அவர்கள் நிபுணத்துவ அறிவுடன் சரியான ஆலோசனை சேவைகளைப் பயன்படுத்த வேண்டுமெனவும் சட்டத்தரணி சுசந்த கட்டுகம்பொல தெரிவிக்கின்றார்.
அண்மையில் கொழும்பு ஜெயிக் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சுசந்த கட்டுகம்பொல,
“இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதும், இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சரியான முறையிலும், சட்டபூர்வமாக இடம்பெயர்வதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதும் எமது அமைப்பின் பிரதான நோக்கமாகும்.
அந்த நோக்கத்திற்காக, Australia Gateway நிறுவனம் மற்றும் Fairfield சட்டத்தரணிகள் குழு இணைந்து இலங்கையர்களுக்கு சரியான வழிகாட்டல்களை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Fairfield சட்டக் குழு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை மையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. அத்துடன் இலங்கையில் கொழும்பு, அப்துல் கபூர் மாவத்தையிலும் அதன் ஒரு கிளை உள்ளது. இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் வாழும் புலம்பெயர்வோருக்கு நாம் எமது சேவைகளை வழங்கி வருகிறோம்.
அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்வதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக திறன் மூலமான இடம்பெயர்வுகளை சுட்டிக்காட்டலாம். அதற்கு தொழில் தகைமைகள், கல்வி மற்றும் ஆங்கில அறிவு ஆகியன முக்கியமாகும் என்பதுடன், அவ்வறான தகைமைகள் கொண்டவர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடத்தையும் குடியுரிமையையும் பெறலாம். இவ்வாறு குடியேறுபவர்களுக்கு நாம் சொல்லும் முதல் அறிவுரை, இலங்கையை மறக்காமல், இலங்கைக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டும் என்பதேயாகும். இலங்கை மீதான விரக்தியால் அவுஸ்திரேலியாவுக்கு வர எண்ணாமல், இலங்கையின் மீது அன்புடன் வந்து, உங்கள் சொந்த வளர்ச்சிக்காகவும் எதிர்கால வாய்ப்புகளுக்காகவும் அயராது உழையுங்கள்.
அவுஸ்திரேலியாவில் முதலீடு செய்வதற்கு இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சொத்து மேம்படுத்தல், விவசாயத் துறை, சேவை விநியோகம், வளத் துறை போன்றவற்றில் முதலீடு செய்வதற்குத் தேவையான வசதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் அவுஸ்திரேலியாவில் முதலீடு செய்வதற்கு 100% பாதுகாப்பை பெறுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டில் முதலீடு செய்வதற்கு சட்ட ரீதியான தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அது மிகவும் நம்பிக்கையான மற்றும் பயனுள்ள வாய்ப்பு என சுட்டிக்காட்டலாம். அவுஸ்திரேலியாவில் முதலீடு செய்ய வருமாறு இலங்கை நிறுவனங்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். இது நமது நாட்டுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.
அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கும் முதலீடு செய்வதற்கும் தேவையான சேவைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குவதற்கும், அந்நாட்டில் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் எமது நிறுவனம் செயற்படும்.
உங்கள் அவுஸ்திரேலிய கனவை நீங்கள் அடைய விரும்பினால், சரியான ஆலோசனை மற்றும் சேவைகளைப் பெறுவது முக்கியமாகும். வணிக இடம்பெயர்வு, திறன் இடம்பெயர்வு, உலகளாவிய திறமை தொடர்பான குடியேற்றம், குடும்ப குடிபெயர்வு போன்றவற்றின் ஊடாக அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்வதற்கு பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்றன.” என கட்டுகம்பொல தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் மிகவும் பொருத்தமான வழியை அடையாளம் காண இலவச ஆரம்ப ஆலோசனைகளை வழங்குதல். எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் வடிவமைக்கப்பட்ட அணுகுமுறையுடன் சாத்தியமான சிறந்த முடிவை அடைய, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் உரிய அணுகுமுறையுடன் உதவுதல். விண்ணப்பத்தை தயாரிப்பதற்கு அவசியமான ஆவணங்களுடன் வாடிக்கையாளருக்கு உதவுதல். வீசா வழங்கும் வரை விண்ணப்பத்தை வாடிக்கையாளர் சார்பாக உரிய முறையில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்தல். இடம்பெயர்வு பாதையில் எதிர்கால சேவை வழங்குனர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல். அவுஸ்திரேலியாவில் குடிபெயர்வதற்கான மாற்றுத் தெரிவுகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குதல். புதிய வணிகமொன்றை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்குதல். அவுஸ்திரேலியாவில் குடியேற வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள், Fairfields சட்டத்தரணிகள் மூலம் வழங்கப்படுகின்றன.