ஊடகத்துறையான “தினகரன்” பத்திரிகை ஒரு தனித்தவமான, பாரம்பரியத்துடன் 92 வருடங்கள் தொடர்ச்சியாக சளைக்காமல் தனது தனித்துவத்தை இழக்காமல் ஓர் தரமான செய்தி பத்திரிகையாக முன்னணி வகித்து வருவதையிட்டு பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது.
தினகரன் பத்திரிகையானது தனது நீண்ட பயணத்தில் அனைத்து செய்திகளையும் அவ்வப்போது வெ ளியிட்டு வருவதுடன், கலை, கலாசாரம், கல்வி, அரசியல், விளையாட்டு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவுசார்ந்த செய்திகளை பிரசுரித்து வாசகர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து வரும் தினகரன், ஊடகத்துறையில் தற்போது 92 வருடங்களை பூர்த்திசெய்து, தொடர்ந்து வாசகர்களுக்கு சேவையாற்றி இருப்பது பெருமகிழ்ச்சியே!
அத்தோடு தினகரனின் நீண்ட பயணத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலைத்துறையைச் சார்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து துறையைச் சார்ந்தவர்களையும் வெ ளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தி ஊக்குவித்து செயலாற்றி வருவதை என்றும் மறக்கமுடியாது.
அந்தவகையில் நீண்ட வரலாற்றைக் கொண்ட தினகரன் பத்திரிகை 92வது வயதை அடைந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும், முதன்மையான, சிகரம் தொட்ட பத்திரிகையாகும். தினகரனுக்கும், தினகரன் நிறுவனத்திற்கும், செய்தி ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்ெகாள்கிறேன்.
கலாபூஷணம், கலைமாமணி, மாத்தளை ராஜ்சிவா சிவலிங்கம்