நாட்டுக்குள் சுமார் 1,000 வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்குத் தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான பிரேரணைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, சுமார் ஆயிரம் வான்களையும், கார்களையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இப்பிரேரணைக்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்குமென எதிர்பார்ப்பதாக, ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.