Sunday, April 28, 2024
Home » பொரளை பகுதியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவருக்கு போதை கடத்தலுடன் தொடர்பு

பொரளை பகுதியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவருக்கு போதை கடத்தலுடன் தொடர்பு

by Rizwan Segu Mohideen
February 20, 2024 11:16 am 0 comment

நேற்றிரவு (19) பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர் கொழும்பு 14, நாகலகம்வீதிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய அமல் பிம்சர என தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த குடியிருப்பின் 5ஆவது மாடியில் தற்காலிகமாக தங்கியிருக்க வந்துள்ள வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், ரிவோல்வர் வகை துப்பாக்கியின் மூலம் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பம் ஏன் இடம்பெற்றமைக்கு காணரம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த காயமடைந்த நபர் போதைப்பொருள் கடத்தல்காரர் எனவும், திட்டமிட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் என, பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த பெப்ரவரி 05ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT