92
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க கொழும்பு நகரைச் சூழவுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்ட CCTV கண்காணிப்பு கெமராக்களில், 793 நடைமுறை மீறல்கள் பதிவாகியுள்ளன.
இதனுடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுமார் 300 பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கடந்த வருடம் 26,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.