104
தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியிலிருந்து, சட்டத்தரனி மனோஜ் கமகே இராஜினாமாச் செய்துள்ளார்.தமது இராஜினாமா கடிதத்தை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பியுள்ளதுடன், நேற்றுமுன்தினம் (13) அப்பதவியிலிருந்து தாம் விலகி உள்ளதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி இப்பதவியை வகித்த காலத்தில் நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக உச்ச அளவு பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளதாகவும், நிறுவனத்தில் நிலவிய பல்வேறு குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கு உரிய தீர்மானங்களை மேற்கொண்டதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.