Sunday, April 28, 2024
Home » மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

by Prashahini
February 13, 2024 2:58 pm 0 comment

வடமத்திய மாகாண சபையின் 2023 ஆம் ஆண்டின் நிதியொதுக்கீட்டில் வடமத்திய மாகாணத்தில் அலங்கார மீன் மற்றும் மீன்பிடியை ஊக்குவிப்பதற்காக 50% பயனாளிகளின் பங்களிப்பின் கீழ் அலங்கார மீன் உபகரணங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (12) வடமத்திய மாகாண ஆளுனர் மஹிபால ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.

அலங்கார மீன் கைத்தொழிலுக்காக மாகாண சபை நிதியில் இருந்து 4 மில்லியன் ரூபாவும் நன்னீர் மீனவர்களுக்கு 4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டது.

இதன் கீழ் 190 பயனாளிகளுக்கு 391 மீன்பிடி வலை கியர்கள் விநியோகிக்கப்பட்டன.

மாகாண விவசாய, மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்தி அமைச்சினால்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகர, மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளரும் ஆளுநரின் செயலாளருமான விஜய வனசிங்க, மாகாண விவசாய அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் செனரத் பத்திரன மற்றும் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கல்நேவ தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT