இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவும் நீண்டகால நண்பரான அமெரிக்கா, இலங்கையின் துறைமுகத் துறையில் மனிதவள மேம்பாட்டுக்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
அமெரிக்க நிதி உதவியின் கீழ் ‘கொழும்பு திட்டம்’ முன்வைக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த 31ஆம் திகதி கொழும்பு மேரியட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிதி உதவியின் கீழ் இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்காக அடுத்த 3 வருடங்களுக்கு நூறு (100) வெளிநாட்டு புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோரின் தலைமையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில்,
இலங்கையின் நீண்டகால நண்பன் என்ற வகையில் துறைமுகம் மற்றும் கப்பல் துறையின் மனித