186
குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் (01) மாலை வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிந்தகொல்ல திகம்பிட்டிய ஸ்ரீபியரதன மகா வித்தியாலயத்தில் கற்கும் சுதேஷ் மதுஷங்க தனது வீட்டுக்கு அருகில்
நண்பர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடிய போது இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கினார். அயல் வீடொன்றின் பாதுகாப்பற்ற மேல் மாடியிலிருந்து தவறி விழுந்த இச்சிறுவன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.