Monday, April 29, 2024
Home » இருபது பசுக்களை திருடிய சம்பவத்தில் 05 பேர் கைது

இருபது பசுக்களை திருடிய சம்பவத்தில் 05 பேர் கைது

கால்நடை மருத்துவருக்கு எச்சரிக்கை

by gayan
February 3, 2024 7:30 am 0 comment

இருபது பசுக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு, கெப்பித்திகொல்லாவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது கால்நடை மருத்துவர் மற்றும் அவரது அலுவலக ஊழியரும் தலா 5,00,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் நீதவானால் விடுவிக்கப்பட்டதுடன், இது தொடர்பான நடவடிக்கைகளில் தலையிட வேண்டாமெனவும் நீதவானால் எச்சரிக்கப்பட்டனர்.

இதேவேளை ஏனைய 03 சந்தேக நபர்களும் எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. பதவிய பிரிவின் கால்நடை மருத்துவர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இச்சந்தேக நபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, திருடப்பட்ட பசுக்களை கொண்டு செல்வதற்கு சந்தேக நபரான கால்நடை மருத்துவர் போலி ஆவணம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT