இருபது பசுக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு, கெப்பித்திகொல்லாவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது கால்நடை மருத்துவர் மற்றும் அவரது அலுவலக ஊழியரும் தலா 5,00,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் நீதவானால் விடுவிக்கப்பட்டதுடன், இது தொடர்பான நடவடிக்கைகளில் தலையிட வேண்டாமெனவும் நீதவானால் எச்சரிக்கப்பட்டனர்.
இதேவேளை ஏனைய 03 சந்தேக நபர்களும் எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. பதவிய பிரிவின் கால்நடை மருத்துவர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இச்சந்தேக நபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, திருடப்பட்ட பசுக்களை கொண்டு செல்வதற்கு சந்தேக நபரான கால்நடை மருத்துவர் போலி ஆவணம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.