Wednesday, May 8, 2024
Home » சனத் நிஷாந்தவின் வெற்றிடம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

சனத் நிஷாந்தவின் வெற்றிடம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
January 26, 2024 3:12 pm 0 comment

புத்தளம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் மறைவைத் தொடர்ந்து 2024 ஜனவரி 25ஆம் திகதி முதல், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் சார்பில் பாராளுமன்ற பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1)ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சார்பில் இதனை அறியத்தருவதாக பிரதிச் செயலாளர் நாயகம் இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற வெற்றிடத்துக்கு புத்தளம் மாவட்டத்தின் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்து உள்ள ஜகத் பிரியங்கர நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர

மறைந்த சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT