Home » ரூ. 10,000 இலஞ்சம் வாங்கிய இரு பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ரூ. 10,000 இலஞ்சம் வாங்கிய இரு பொலிஸ் உத்தியோகத்தர் கைது

by gayan
January 18, 2024 7:10 am 0 comment

10,000 ரூபாவை லஞ்சமாக பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழ தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்த ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில்,

நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் முன்வைத்த முறைப்பாட்டையடுத்து, நபர் ஒருவரின் வீடு சோதனையிடப்பட்டது. மதுபானம் மற்றும் கசிப்பு ஆகியவை அவ்வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, வீட்டுரிமையாளர் கைது செய்யப்படவிருந்த வேளையில், இதிலிருந்து தப்பிக்க மேற்படி இவர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதை,பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பெற்றுள்ளனர்.இதையடுத்தே இவர்கள் கைதாகினர்.மேலும், லஞ்சம் வழங்கியவரையும் அதிகாரிகள் கடந்த (16) கைது செய்தனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT