முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவுதின அஞ்சலி நிகழ்வுகள் நேற்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க உருவச் சிலைக்கு அருகில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் புதல்விகளானசந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோர் கலந்துகொண்டு அமரர் பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
அதனையடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், முன்னாள் பிரதமரின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)