Tuesday, April 30, 2024
Home » ஐக்கிய மக்கள் சக்திக்குள் உட்பூசல் உக்கிரமடைகிறது

ஐக்கிய மக்கள் சக்திக்குள் உட்பூசல் உக்கிரமடைகிறது

ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் இணைவதால் பழையவர்கள் புறக்கணிப்பு

by damith
January 9, 2024 7:00 am 0 comment

வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள நிலையில் அந்த கட்சிக்குள் உள்ளக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாக சில கட்சிகளிலிருந்து உறுப்பினர்கள் சிலர் அந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

இத்தகைய நிலையில் அந்த கட்சியுடன் புதிதாக இணைந்து கொண்டுள்ள சில தரப்பினருடன் அந்தக் கட்சியில் உள்ளவர்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கட்சியில் இணைவதாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பான போட்டி உக்கிரமடையலாம் என்ற காரணத்தினாலேயே அவர்கள் இந்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டு அந்த கட்சியில் இணைந்து கொண்டவர்கள் ஜயரத்ன ஹேரத், சந்திம விஜயகொடி, சான் விஜேயலால் மற்றும் தயாசிறித திசேரா ஆகியோர் மட்டும என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT