Sunday, April 28, 2024
Home » பொகவந்தலாவையில் விசேட டெங்கு வேலைத்திட்டம்

பொகவந்தலாவையில் விசேட டெங்கு வேலைத்திட்டம்

by damith
January 8, 2024 5:55 am 0 comment

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் 07.01.2024.ஞாயிற்றுக்கிழமை டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தில் ஹட்டன் பொலிஸ் வலையத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிப்புன தெய்கம பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார. பொகவந்தலாவ பொதுசுகாதார வைத்திய அதிகாரி.பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள். பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய. பொகவந்தலாவ முச்சக்கர வண்டி சாரதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வேலைத்திட்டத்தில் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலை. பொகவந்தலாவ பிரதான பேருந்து தரிப்பிடம்.பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய பாடசாலை ஆகிய பகுதிகளில் இந்த டெங்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT