தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளின் பெளத்த மதத் தலைவர்கள் பங்குபற்றிய சர்வதேச சங்க மாநாடு புத்தகாயவில் நடைபெற்றுள்ளது.
சர்வதேச பெளத்த கூட்டமைப்பும் தலாய் லாமா அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மூன்று நாட்கள் சங்க மாநாட்டை திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.
நவீனத்துவத்தை தழுவி பாரம்பரியங்களை இணைத்தல் என்ற தொனிப்பொருளில் நடைபெற்றுள்ள இம்மாநாட்டில் இந்தியா, தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, லாவோஸ், இலங்கை, பங்களாதேசம், இந்தோனேசியா, பூட்டான், நேபாளம், வியட்நாம், சீனா, தாய்வான், ஜப்பான், கொரியா, ரஷ்யா, மங்கோலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெளத்த மதத் தலைவர்களும் புத்திஜீவிகளும் பங்குபற்றியுள்ளனர்.