Sunday, April 28, 2024
Home » 66 தங்க பிஸ்கட்டுகளை உள்ளாடைக்குள் வைத்து கடத்திய நபர் கைது

66 தங்க பிஸ்கட்டுகளை உள்ளாடைக்குள் வைத்து கடத்திய நபர் கைது

- ஶ்ரீலங்கன் கேட்டரிங்கில் பணிபுரியும் ஊழியர்

by Rizwan Segu Mohideen
December 31, 2023 10:36 am 0 comment

– ரூ. 17.6 கோடி பெறுமதி என மதிப்பீடு

விமான நிலையத்திலிருந்து 66 தங்க பிஸ்கட்டுகளை கடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக, சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர், 7.7 கிலோகிராம் நிறையுடைய 66 தங்க பிஸ்கட்டுளை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுளாளர்.

ஶ்ரீலங்கன் கேட்டரிங் (விமான சேவை உணவகம்) நிறுவனத்தில் பணிபுரியம் 35 வயதான ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி ரூ. 17.6 கோடி (ரூ. 176 மில்லியன்) என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT