149
கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்டுள்ள 200 க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற மரங்களை வெட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு மாநகர ஆணையாளர் ஜே.எம்.பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார்.
பேராதனை தாவரவியல் பூங்கா அதிகாரிகளும் மற்றும் நிபுணர்களும் இணைந்து ஆய்வை மேற்கொண்டதாகவும் இதன் அடிப்படையிலேயே சுமார் 200 மரங்களை வெட்டுவதற்கு அவர்கள் கோரியதாகவும், அவர் தெரிவித்தார். இந்நிலையில், கொழும்பு நகரில் பாதுகாப்பற்ற மரங்களை வெட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.