223
கட்டுகெலியாவ கே.எஸ்.சீ விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கே.எஸ்.சீ. அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
கட்டுக்கெலியாவ பொது விளையாட்டரங்கில் கடந்த திங்கட்கிழமை (25) நிறைவடைந்த இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் நேகம அரபா அணியை கே.எஸ்.சீ. தோற்கடித்தது. இதில் நேகம அரபா அணி நிர்ணயித்த 5 ஓவர்களில் 44 ஓட்ட வெற்றி இலக்கை கே.எஸ்.சீ. அணி 4 ஓவர்களில் எட்டியது.
தொடர் நாயகனாக காவிந்தவும், சிறந்த பந்துவீச்சாளராக ஆர்.எம். ரபாஸ் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரராக வை.எல்.எம். அக்ரமும் தெரிவாகினர்.
கல்நேவ தினகரன் விசேட நிருபர்