தேசபந்து தென்னக்கோன்
பாதாள உலகச்செயற்பாடுகள், போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் இன்னும் ஆறுமாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படுமென பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த நாட்டையும் ஆக்கிரமித்துள்ள போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படுமென அவர் தெரிவித்துள்ளார். மக்கள் அமைதியான சூழ்நிலையில் வாழ்வதற்கான பின்னணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுக்திய என்னும் பெயரில் விசேட பொலிஸ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இம்மாதம் 17 இல்,ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை எதிர்வரும் 23 வரை தொடரும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக இணைந்து முன்னெடுத்த யுக்திய நடவடிக்கையின் ஊடாக இதுவரையில் 6,583 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.