204
புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசாரத் திணைக்களம், இலங்கை கலைக்கழகம் மற்றும் அரச நாடக ஆலோசனைக்குழு ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய நாடக விழாவின் ‘பொன்விழா’, மஹரகம தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தில் (19) நடைபெற்றது. ‘நாடகக் கீர்த்தி’ அரச உயர்விருதை வாழ்நாள் சாதனையாளர்களான சிரேஷ்ட கலைஞர்கள் கலைஞானி கலைச் செல்வன், பேராசிரியர் சுனந்த மஹேந்திர ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவர்களுக்கான விருதுகளை வழங்கியபோது பிடிக்கப்பட்ட படம்.