Sunday, May 5, 2024
Home » மில்கோ நிறுவன தலைவர் ரேணுக பெரேரா இராஜினாமா

மில்கோ நிறுவன தலைவர் ரேணுக பெரேரா இராஜினாமா

- சேவைக் காலம் இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் பதவி விலக தீர்மானம்

by Prashahini
December 18, 2023 12:10 pm 0 comment

மில்கோ நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ரேணுக பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நிதியமைச்சின் செயலாளருக்கு இன்று (18) கடிதம் ஒன்றை அனுப்பி அவர் இதனை அறிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல், ரேணுக பெரேரா மில்கோ நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

அரசின் கொள்கை முடிவின்படி மில்கோ நிறுவனத்தை தனியார் மயமாக்கும் பணியை உள்ளூர் நிறுவனமும், இந்திய நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ளனர்

இந்த பின்னணியில், தனது சேவைக் காலம் இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நிறுவனத்தை மேலும் முன்னேற்றுவதற்கு தனது நேரத்தை செலவிடுவது பயனளிக்காத காரணத்தினால் பதவி விலக தீர்மானித்துள்ளதாக ரேணுக பெரேரா, நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT