Monday, April 29, 2024
Home » பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் மெலிண்டா கேட்ஸ் பிரதிநிதிகள்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் மெலிண்டா கேட்ஸ் பிரதிநிதிகள்

by mahesh
December 13, 2023 8:10 am 0 comment

பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தனர்.

கொழும்பிலுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இச்சந்திப்பு (11) இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகைதந்த இவர்களை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வரவேற்றார்.

தெற்காசியாவில் தயார்நிலை மூலம் நிலையான தேசிய எதிர்பார்ப்பு நடவடிக்கையை (SNAP) தொடங்குவது தொடர்பான விடயங்கள் குறித்து இதன்போது சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டது.

அமைப்பின் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி, திருமதி பிலார் பச்சேகோ, மீட்பு நடவடிக்கைகளுக்கான தயார்நிலைப் பணிப்பாளர் கலாநிதி சிசிர மதுரப்பெரும மற்றும் ஆசிய அனர்த்த தயார்நிலை மையத்தின் நிர்மலா பெர்னாண்டோ ஆகியோர் இந்த சந்திப்பின் போது கலந்துகொண்டனர்.

இவ்வமைப்பானது, இலங்கையில் பல திட்டங்கள் உட்பட பிராந்தியத்தில் அனர்த்த அபாய நிலைமைகளைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு நீண்டகாலமாக உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT