டுபாயில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று (12) நேபாளம் அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.
‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று நேபாளத்துடன் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணியானது ராஜ் லிம்பானியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 22.1 ஓவர்களில் 52 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
எந்த துடுப்பாட்ட வீரரும் இரட்டை இலக்க ஓட்டங்களை எட்டவில்லை. அதிகபட்சமாக ஹேமந்த் தாமி 8, தீபக் போஹாரா 7, அர்ஜூன் குமல் 7 ஓட்டங்களை சேர்த்தனர்.
இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட்டும், ஆராத்யா சுக்லா 2 விக்கெட்டும், அர்ஷின் குல்கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
53 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 7.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆதர்ஷ் சிங் 13 ஓட்டங்களும் ,அர்ஷின் குல்கர்னி 43 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
7 விக்கெட் வீழ்த்திய ராஜ் லிம்பானி தொடரின் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.