அமானா வங்கி தனது அட்டாளைச்சேனை ATM நிலையத்தினை, நவீன வசதிகள் படைத்த சுய வங்கி நிலையமாக தரமுயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு பணம் மற்றும் காசோலை வைப்பு ஆகியவற்றுடன், நிலையத்தில் இதர வங்கியியல் தேவைகளை பெற்றுக் கொள்வதற்கு உதவும் வகையில் வாடிக்கையாளர் சேவை முகவர்களையும் கொண்டிருக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மெருகேற்றத்துடன், அமானா வங்கியின் வாடிக்கையாளர் வலையமைப்பு தற்போது 57 ஆக அதிகரித்துள்ளதுடன், இவற்றில் கிளைகள் மற்றும் சுய வங்கி நிலையங்கள் போன்றன அடங்கியுள்ளன.
புதிய பிரதேச சபை கட்டடத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை அமானா வங்கி சுய வங்கி நிலையத்தை, வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் அங்குரார்ப்பணம் செய்தார். இந்நிகழ்வில், வைப்புகள் மற்றும் டிஜிட்டல் புத்தாக்க செயற்பாடுகளுக்கான உதவி உப தலைவர் அர்ஷாத் ஜமால்தீன், அக்கரைபற்று கிளை முகாமையாளர் சஹிர் அஹமட், பிரதேசத்தின் வியாபார பிரதிநிதிகள் மற்றும் பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர். AB Securitas (Pvt) Ltd. உடனான பங்காண்மையில் அமானா வங்கியின் அக்கரைப்பற்று கிளையின் மேற்பார்வையின் கீழ் இந்த நிலையம் இயங்கும்.
இந்த மெருகேற்றம் தொடர்பில் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எமது வாடிக்கையாளர்களின் வங்கியியல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த மெருகேற்றம் அமைந்திருக்கும். இந்த நிலையத்தில் சேவைகளை வழங்கும் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகளின் பிரசன்னத்துடன், வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு வங்கியியல் சேவைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2023 ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட தேசிய நீண்ட கால தரப்படுத்தலில் BB+(lka) எனும் உறுதியான தோற்றத்தை வழங்கியிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.