358
மலையகப் புகையிரத பாதையில் நிலச்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது
இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மலையக புகையிரத பாதையில் ஹாலிஎல முதல் எல்ல வரையான புகையிரத பாதையில் மண் பாறைகள் சரிந்து விழுந்து புகையிரத பயணத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
உடுவர உப நிலையத்திற்கு அருகில் உள்ள கிரவணாகொட பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் உடரட்ட மெனிகே புகையிரதமும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த இரவு அஞ்சல் புகையிரதமும் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டதுடன் ரயில்வே பணியை சீரமைக்க மேலும் பல ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.
ஹாலிஎல விசேட நிருபர்