திருகோணமலை மாவட்டத்திலுள்ள சின்னவெளி பிரதேசத்தில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரின்றி நீண்டகாலமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். இவர்களின் இப்பிரச்சினை தொடர்பில் அல்ஹிமா அமைப்பினருக்கு அறிவிக்கப்பட்டு, அவ்வமைப்பினூடாக பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அல்ஹிமா அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நூறுல்லாஹ் எடுத்த நடவடிக்கையின் காரணமாக குவைத் நாட்டின் இலங்கை மக்களுக்கான மனிதாபிமான உதவித்திட்டத்தின் கீழ் இப்பிரதேச மக்களுக்கென ஆழ் கிணறு குடிநீர் திட்டம்பெற்றுக்கொடுக்கப்பட்டு அண்மையில் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வில் அல்ஹிமா அமைப்பின் பணிப்பாளர் உட்பட பிரதேச பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
கந்தளாய் தினகரன் நிருபர்