174
புத்தளம் மாவட்டத்தில் இரு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி இதைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்கள் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக,தெதுரு ஓயா மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால்,அயல் பிரதேசத்தில் உள்ளவர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.