காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதிக்கு அருகாமையில் காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.
மட்டக்களப்பு – பொத்துவில் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ் வண்டி நேற்று (08) மாலை 7.00 மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டு உரிமையாளர் தனது சொந்த இடமான கொக்கட்டிச்சோலைக்குச் சென்று விட்டார். இன்று (09) அதிகாலை 3:30 மணியளவில் குறித்த பஸ் வண்டி தீப்பற்றி எரிவதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸார் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டபோது பஸ் வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது.
இத்தீ பரவலில் பஸ் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸ் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையணி ஸ்தலத்துக்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.
குறித்த பஸ் எரிந்தமைக்கான காரணத்தினை கண்டறிவதற்காக காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரையம்பதி தினகரன் நிருபர்
ரீ.எல்.ஜவ்பர்கான் – மட்டக்களப்பு குறூப் நிருபர்