நாடு முழுவதிலும் தபால் நிலையங்கள் நாளை வழமை போல் இயங்குமென தபால் மாஅதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ. எம்.ஆர்.பி.சத்குமார தெரிவித்தார்.
தபால் திணைக்கள தொழிற்சங்கம் நேற்று (07) நள்ளிரவு 12 மணி முதல் நாளை (09) நள்ளிரவு 12 மணி வரை மேற்கொள்ளவுள்ள 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் தொடர்பாக நேற்று போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருடன் கலந்துரையாடியதாக தபால் மாஅதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ. எம்.ஆர்.பி. சத்குமார தெரிவித்துள்ளார். தபால் அலுவலகங்கள் எதுவும் மூடப்படாதெனவும் நுவரெலிய அலுவலக கட்டடம் அரச கொள்கைக்கமைய மிகவும் திறன் வாய்ந்த முதலீட்டுச் சந்தர்ப்பத்துக்காக வழங்கப்படவுள்ளது.