Home » உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிப்பு
“பெறுமதி சேர் வரி (வற்) திருத்தச் சட்டமூலம்

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிப்பு

லோரன்ஸ் செல்வநாயகம்

by mahesh
November 8, 2023 6:00 am 0 comment

பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நிராகரித்துள்ளதாக சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது.

வழமையாக இடம்பெறும் சபாநாயகர் அறிவிப்பின்போது சபாநாயகரின் சார்பில் பிரதி சபாநாயகர் இதனை சபைக்கு அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பெறுமதி சேர் வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் நீக்கிக் கொள்கிறது.

மனுதாரர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகக்கு இணங்க மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வும் உயர்நீதிமன்றம் தனக்கு அறிவுத்துள்ளதாக சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT